×

இலவச ஸ்மார்ட் போன் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

நாகர்கோவில், பிப்.19: செவித்திறன் குறைபாடு உடைய மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்குவதற்கு நேர்காணல் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சிவசங்கர், மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் பிச்சை உட்பட மாவட்ட கலெக்டர் நியமித்த குழுவினர் தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு