×

பொதுமக்கள் கோரிக்கை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

திருவெறும்பூர், பிப். 19: திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் திருவெறும்பூர் பஸ்டாண்ட் கடைவீதியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. திருவெறும்பூர் காவல் உட்கோட்ட பகுதிகளான திருவெறும்பூர், பெல், துவாக்குடி நரிக்குறவர் காலனி, நவல்பட்டு, மணிகண்டம் ஆகிய பகுதியில் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. திருவெறும்பூர் கடைவீதியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏடிஎஸ்பி மணிகண்டன் துவக்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனிதா, திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரி மன்னன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடி குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ததோடு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags : art show ,children ,crimes ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...