×

11 இடங்களில் இன்று வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

திருச்சி, பிப். 19: திருச்சி மாவட்டத்தில் 11 இடங்களில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (19ம் தேதி) நடக்கிறது. திருச்சி கலெக்டர் சிவராசு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று (19ம் தேதி) நடக்கிறது. அதன்படி திருச்சி கிழக்கு (வட்டம்)- கே.சாத்தனூர் தெற்கு (கிராமம்), திருச்சி மேற்கு- பிராட்டியூர் (மேற்கு), திருவெறும்பூர்-கிருஷ்ணசமுத்திரம், ரங்கம்- மேக்குடியில் குறைதீர் முகாம் நடக்கிறது. அதேபோல் மணப்பாறை-வையமலை பாளையம், மருங்காபுரி- ஆமணக்கம்பட்டி, லால்குடி-குமுளுர், மண்ணச்சநல்லூர்- தீராம்பாளையம், முசிறி- சூரம்பட்டி, துறையூர்-சிறுநாவலூர், தொட்டியம்- சீலைப்பிள்ளையார்புதூர் ஆகிய 11 இடங்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் வருவாய்த்துறை தொடர்பானவற்றுக்கு மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : grievance camp ,revenue department ,places ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி