×

காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சி, பிப். 19: திருச்சியில் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க நுகர்வோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஸ் நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடு போன்ற குறைபாடுகளை களையும் வகையில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு வட்டங்களுக்கு உட்பட்ட காஸ் முகவர்கள், எண்ணெய் நிறுவன மண்டல மேலாளர்கள் மற்றும் காஸ் நுகர்வோர் பங்கேற்கும் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் நாளை (20ம் தேதி) நடக்கிறது.

கூட்டத்தில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு வட்டங்களுக்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்று கொள்ளலாம். மேலும் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு வட்டங்களுக்கு உட்பட்ட நுகர்வோர், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று காஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Cos Consumer Complaints Meeting ,
× RELATED கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்