×

முதுகுளத்தூரில் மாநில சிறுவர் இளையோர் கபடி போட்டி திருவாரூர் மாவட்ட அணி வீரர்களுக்கு சீருைட வழங்கி வழியனுப்பு விழா


மன்னார்குடி, பிப்.19: முதுகுளத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க உள்ள திருவாரூர் மாவட்ட அணிக்கு வழியனுப்பு விழா வடுவூரில் நடந்தது. மாநில 47வது சிறுவர் இளையோர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு பள்ளியில் இன்று (19ம்தேதி) முதல் வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் போட்டிகள் வடுவூர் உள்விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடை பெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 30 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு பல்வேறு தகுதி சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதிலிருந்து திருவாரூர் சிறுவர் இளையோர் அணிக்கு 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 3 நாட்களாக பயிற்சி முகாம் வடுவூர் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் பயிற்சி நிறைவு மற்றும் சீருடைகள் வழங்கும் விழா ஏவிஆர் குரூப்ஸ் நிறுவனர் அன்புவேல்ராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில அளவிலான போட்டியில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் விளையாட தேர்வாகியுள்ள வீரர்களுக்கு மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் ராஜ ராஜேந்திரன், வடுவூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் சாமிநாதன், மாவட்ட கபடி கழக துணைத் தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் சீருடைகள் வழங்கினர்.
வீரர்களை வாழ்த்தி ஓய்வு டிஎஸ்பி கணேசமூர்த்தி, சோனாப்பேட்டை முருகானந்தம், முன்னாள் மாநில கபடி வீரர் கருணாநிதி, அமெச்சூர் கபடி கழக செயற்குழு உறுப்பினர் வேலுமணி ஆகியோர் வீரர்களை வாழ்த்தி பேசினர். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர்கள் சேகர் வரவேற்றார். உதயகுமார் நன்றி கூறினார்.

Tags : State Children's Youth Kabaddi Competition ,Mudukulathur ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...