×

cபெருகவாழ்ந்தான் அருகே ஆடுகள் திருடிய 4 வாலிபர்கள் கைது

மன்னார்குடி, பிப்.19: திருவாரூர் அடுத்த பெருகவாழ்ந்தான் அருகே கர்ணாவூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் 4 வாலிபர்கள் வேன் ஒன்றுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்தனர். விசாரித்ததில் 4 வாலிபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் வேனை சோதனையிட்டதில் அதில் 4 ஆடுகள் இருந்தன. இதையடுத்து அந்த வேனையும், 4 பேரையும் பெருகவாழ்ந்தான் காவல்நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் பெருகவாழ்ந்தான் அடுத்த தேவதானம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்(23), இவரின் கூட்டாளிகளான கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர்(24), நாகர்கோவில் நிஷாந்த்(23), கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ராக்(21) எனவும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து கிராமப்புறங்களில் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆடுகளையும், வேனையும் பறிமுதல் செய்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : teenagers ,Perugavalan ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு