×

ஏலதாரர்கள் ஏமாற்றம் தாலுகா அலுவலகங்கள் முன் கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்த கையெழுத்திடும் போராட்டம்

வலங்கைமான், பிப்.19: கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் வலங்கைமான், திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் ரத்த கையெழுத்து இயக்க போராட்டம் நடத்தினர். வலங்கைமான் தாலுகா அலுவலகம் முன் கிராம உதவியாளர் சங்க வட்டத் தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் ரத்தக் கையெழுத்து போராட்டம் நடந்தது. இதில கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் 15,700 வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7,000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரத்த கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் நடந்த ரத்த கையெழுத்து இயக்க போராட்டத்திற்கு வட்டத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர். பொருளாளர் குமார் நன்றி கூறினார்.

Tags : Auctioneers ,protest ,taluka offices ,Village Assistants Association ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...