நீடாமங்கலம் .பிப்.19: நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் சன்னரக நெல் மூட்டைகள் 80 லாரிகளில் ஏற்றி நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 21 வேகன்களில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் அரவைக்காக நெல்லை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.