×

கும்பகோணம் அடுத்த ஆடுதுறையில் வேளாண் கல்லூரி அமைக்க கோரிக்கை

கும்பகோணம், பிப்.19: கும்பகோணம் அடுத்த ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கரிடம் அனைத்துக் கட்சி சார்பில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், வன்னியர் சங்க மாநில துணைச் செயலாளர் ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான் ஆகியோர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகள் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தோடு கூடிய வேளாண் விவசாய கல்லூரி அமைக்க வேண்டும், குறிப்பாக ஸ்காலர் என்று சொல்லக்கூடிய ஆராய்ச்சி மாணவர்களே கூடுதலாக சேர்க்க வேண்டும் அதற்கான நிதியை அரசாங்கம் கொடுக்க வேண்டும், 33 லட்சம் லிக்டர் மெட்ரிக் டன் நெல் கொடுக்க கூடிய 8 மாவட்டத்துக்கு உட்பட்ட காவிரி டெல்டா பாசன பகுதியை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம், விவசாயத்தை சார்ந்து உள்ளதால் 25 லட்சம் ஏக்கர் நிலம் உள்ள இப்பகுதி உடைய மக்கள் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கக் கூடிய இந்த கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Tags : Aaduthurai ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்