×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை பள்ளி மேலாண்மை குழுவினருக்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை கூட்டம்

விராலிமலை, பிப்.19: விராலிமலை வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளியில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிற்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விராலிமலை வட்டார வளமையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு விராலிமலை வட்டார கல்வி அலுவலர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளியில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிற்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. புள்ளி மேலாண்மை குழு மூலம் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவது, வாசகங்கள் மாணவர்களின் பார்வையில் படும் வண்ணம் பள்ளி வகுப்பறைகள், காலை வணக்க கூட்டம் நடைபெறும் இடம், பள்ளி சுற்று சுவர்களில் எழுதுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

Tags : meeting ,school management team ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...