×

கணக்கெடுப்பு குழு தகவல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு டவுன் ஹாஜி நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.19: பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனியாக டவுன் ஹாஜி நியமனம் செய்ய வேண்டி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் பண்டிகை மற்றும் அவர்களின் முக்கிய நிகழ்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை உடைய நபரான டவுன் ஹாஜி என்று அழைக்கப்படும் பொறுப்பாளரை இது வரை மாவட்டநிர்வாகம் நியமிக்க வில்லை. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் டவுன் ஹாஜி பணியிடம் நியமிக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் தனியே டவுன் ஹாஜி நியமிக்கப்பட்டு இஸ்லாமியர்களின் பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிக ழ்வுகளை நிர்ணயிக்கும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் டவுன் ஹாஜி நியமனம் செய்யாத தை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நேற்று பெரம்ப லூர் புதுபஸ்டாண்டில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சையது உசேன், மாவட்ட செயலாளர் மீரா மொய்தீன், பொருளாளர் முகமது இலியாஸ் அலி, துணைத்த லைவர் முகமது இலியாஸ், துணைச் செயலா ளர் ரஷீத் அஹ்மது மற்றும் முஸ்லிம் முன் னேற்றக்கழக மாவட்ட செ யலாளர் குதரத்துல்லா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Survey Committee Information Demonstration ,Town Haji ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...