×

முககவசம் கட்டாயம் கோயில்களில் பாதுகாப்பு முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

நாகை, பிப்.19: நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் 47 இரவு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரத்து 300 வழங்கப்பட்டு வருகிறது. திருக்களாச்சேரி நாகநாதசுவாமி திருக்கோயில், தில்லையாடி கிராமம் - சாரந்தாரை காத்தசுவாமி திருக்கோயில், செம்பனார்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், நாகை நகர - சட்டநாதசுவாமி திருக்கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், வரதராஜபெருமாள் திருக்கோயில் ஆகிய கோயில்களில் பாதுகாப்பு பணிக்கு 62 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தங்கள் பெயரை நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது exwelngp@tn.gov.in  mailto:exwelngp@tn.gov.in  என்ற இணையதள முகவரி வாயிலாகவோ பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்கள் அறிய நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை 04365-253042 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : ex-servicemen ,temples ,
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...