×

காரைக்காலில் 4 பேருக்கு கொரோனா

காரைக்கால், பிப்.19: காரைக்காலில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 17.2.2021 அன்று 428 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநள்ளாறை சேர்ந்த 2 பேருக்கும், நிரவியை சேர்ந்த ஒருவருக்கும், காரைக்காலை சேர்ந்த ஒருவருக்கும் என நான்கு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 3963 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3867 ஆகவும் உள்ளது. 28 பேர் தனிமையிலும் சிகிச்சையிலும் இருந்து வரும் நிலையில் 72 பேர் கொரோனா நோய் தொற்றுடன் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,Karaikal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...