×

மேட்டூரில் சோகம் சரக்கு ரயில் மோதி ஐடிஐ மாணவர் பலி

சேலம், பிப்.19: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள புதுச்சாம்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹரிகரன் (16). மேட்டூர் அரசு ஐடிஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தனது வீட்டருகேயுள்ள ரயில்வே தண்டவாள பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே நிலக்கரி லோடு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் வந்தது. அந்த ரயிலில் அடிபட்டு, மாணவன் ஹரிகரன் தூக்கி வீசப்பட்டுள்ளார். தலை, கால்களில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மாணவன் ஹரிகரனை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி ஹரிகரன் உயிரிழந்தார். இதுபற்றி சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபண்ணா வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : ITI ,student ,Mettur ,
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது