மேட்டூர், பிப்.19: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ₹15,700 வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு ஊழியர்களுக்கு இணையாக ₹7 ஆயிரம் போனஸ், குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹7,850 வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக 15ம்தேதி முதல் ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கத்தை துவக்கியுள்ளனர். நேற்று மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்தத்தால் கையெழுத்து போட்டனர். வரும் 24ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.