×

கொல்லிமலையில் பரபரப்பு விவசாயி அடித்து கொலை அண்ணன் மகன் அதிரடி கைது

சேந்தமங்கலம்,  பிப்.19: கொல்லிமலையில், 60 வயது விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பைல்நாடு மேக்கினி காடு பகுதியைச் சேர்ந்தவர்  குப்புசாமி(60). விவசாயியான இவர், திருமணம் செய்து கொள்ளவில்லை.  இந்நிலையில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாமல் இருந்து வந்தார். சில  நாட்களாக தெருவில் செல்லும் பெண்கள்,  குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதி  மக்கள் கண்டித்ததால், கடந்த 9ஆம் தேதி முதல் குப்புசாமியை அவரது வீட்டில்  கட்டிப்போட்டு உணவு கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம்  இரவு, உணவு கொடுப்பற்காக சென்றபோது குப்புசாமி இறந்து கிடந்தார். இதுகுறித்த  தகவலின்பேரில், வாழவந்தி நாடு போலீசார் விரைந்து சென்று குப்புசாமியின்  சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில், தலையில்  பலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. தீவிர  விசாரணையில், ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் குப்புசாமி அத்துமீறி  நடந்து கொண்டதால், ஆத்திரமடைந்த அவரது அண்ணன் மீனாட்சி மகன் பிரகாஷ்(37)  என்பவர், சரமாரி தாக்கியதில் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நேற்றிரவு பிரகாஷை கைது  செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மனநலம் பாதித்த விவசாயி  அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Action arrest ,nephew ,death ,
× RELATED பாஜக எம்எல்ஏவின் மருமகன்.. ஈரோடு...