×

சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரியில், திமுக சார்பில் வரும் 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டும், காணாமலும் இருக்கும் மத்திய -மாநில அரசுகளை கண்டித்து, வரும் 22ம் தேதி(திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர், தொமுசவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு செங்குட்டுவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : Demonstration ,Krishnagiri ,DMK ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி