×

ஊத்தங்கரையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி, பிப்.19: மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 20ம் தேதி ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை மற்றும் சேலம் ஆகிய நகரங்களை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் பங்கேற்கலாம்.  இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை ஆகும். இத்தகுதியுடைய பணிநாடுநர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Uttaranchal ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்