தர்மபுரி, பிப்.19: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது நண்பர் பாலக்கோடு அருகே அ.மல்லபுரத்தை சேர்ந்த கார்த்திக். இந்நிலையில், கார்த்திக் பாலக்கோட்டில் நிலம் வாங்கி கொடுப்பதாக கடந்த கிருஷ்ணனிடம் பல தவணையாக 16.6.2018 ஆண்டு முதல் ₹82 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி நிலத்தை வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், கொடுத்த பணத்தை கேட்ட போதும், அவர் தரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணன், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நில மோசடி செய்ததாக கார்த்திக் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.