×

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்

தர்மபுரி, பிப்.19:  தர்மபுரியில் 210 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்மார்ட் போன்களை அமைச்சர் கேபி அன்பழகன் வழங்கினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட, பார்வையற்ற 210 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹27.29 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போன்கள், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹8.99 லட்சம் மதிப்பில் திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கேபி அன்பழகன் நேற்று வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். இதில், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், டிஆர்ஓ ராமமூர்த்தி, தர்மபுரி சப்கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டிஆர் அன்பழகன், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி, வேளாண்மை விற்பனை குழு துணைத்தலைவர் சிவபிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா