×

மங்கலம் ஊராட்சி தலைவருக்கு டாக்டர் பட்டம்

திருப்பூர், பிப்.19: திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மருதாசலமூர்த்தி (54).  இவர், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி கிருமி நாசினி தெளிப்பில் இந்திய அளவில் சிறந்த ஊராட்சியாக மங்கலம் ஊராட்சியை மத்திய அரசு தேர்வு செய்தது. சிறந்த ஊராட்சி தலைவருக்கான சுதந்திர தின சிறப்பு விருது திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். சேவா ரத்னா விருது கடந்த ஜனவரி 2ம் தேதி நீதிபதி கிருஷ்ணன் வழங்கினார்.
 இவர் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததை பாராட்டி தி அமெரிக்கன் யுனிவர்சிட்டி, அமெரிக்காவின் உலகளாவிய அமைதிக்கான கலைக்கூடம் மூலம் சிறந்த சமூக சேவகருக்கான டாக்டர் பட்டத்தை கடந்த 14ம் தேதி வழங்கியுள்ளது. இதையொட்டி மங்கலம் பகுதி பொதுமக்கள் மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஊராட்சி தலைவரை பாராட்டி பிளக்ஸ் வைத்துள்ளனர்.

Tags : Mangalam Panchayat ,President ,
× RELATED திருப்பாலைக்குடியில் கால்நடை மருத்துவமனை திறக்க மக்கள் கோரிக்கை