திருப்பூர், பிப்.19: திருப்பூர் வீரபாண்டி பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீரபாண்டி பிரிவு டாஸ்மாக் கடை முன்பாக மது விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கையை சேர்ந்த ரமேஷ் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கணபதிபாளையம் பகுதியில் மது விற்பனை செய்த சுரேஷ்குமார், சக்திவேல் உள்பட ெமாத்தம 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.