திருப்பூர், பிப்.19: தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநகர மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமையில் திருப்பூர் கலெக்டர் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீதிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிவதாக கூறி அதற்கு பொட்டு வைத்தும், பூசாரிகளை வைத்து வழிபடும் மூடநம்பிக்கை நடத்து வருகிறது. எனவே, அரசுக்கு சொந்தமான இடத்தில் வழிபாட்டு தலங்களும், வழிபாடுகளும் நடத்தக்கூடாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.