×

காதல் தோல்வியால் கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

தாராபுரம், பிப்.19: தாராபுரம் அடுத்த சூரிய நல்லூரை சேர்ந்தவர் செந்தில்குமார் விவசாயி. இவர் நேற்று தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள தனியார் வங்கியின் முன் தனது காரை நிறுத்திவிட்டு நகைகஙகடன் பணத்தை பெற்று வர வங்கிக்குள் சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் கல்லால் காரின் முன்பக்க கதவு கண்ணாடியை உடைத்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்து கார் கண்ணாடியை உடைத்து பணத்தை எடுக்க முயன்றதாக கூறி வாலிபரின் கைகளை கட்டி தர்ம அடி கொடுத்து தாராபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பதும், இவர் தாராபுரத்தை அடுத்த பூளவாடி சாலையில் செயல்படும் ஒர்க் ஷாப் ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், தற்போது அந்தப் பெண் தன்னை காதலிக்கவில்லை என்று மறுத்ததால் காதல் தோல்வியில் மது போதையால் கார் கண்ணாடியை உடைத்து விட்டதாகவும் கூறினார். இதனைத்தொடர்ந்து போலீசார் விக்னேஷ் வேலை செய்யும் ஒர்க்ஷாப் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி பின்னர் விக்னேஷை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை