×

நீலகிரியில் 9 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி

ஊட்டி, பிப்.19: நீலகிரியில் 9 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 9 பேர் பாதித்த நிலையில் தொற்றால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,297 ஆக உயர்ந்துள்ளது. 4 பேர் குணமடைந்து வீடு திரும்பிய தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8,201 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 48 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உள்ளது.

Tags : Corona ,Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...