×

நீலகிரி மாவட்ட எஸ்பி.யாக பாண்டியராஜன் நியமனம்

ஊட்டி, பிப்.19:காவல்துறை அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்ட புதிய எஸ்பி.யாக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்ட எஸ்பி ஆக கடந்த ஓராண்டிற்கு மேலாக சசிமோகன் இருந்து வந்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகைளை பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்ட எஸ்பி.யாக இருந்த சசிமோகன் சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி.யாக இருந்த பாண்டியராஜன் நீலகிரி மாவட்ட எஸ்பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓரிரு நாட்களில் நீலகிரி எஸ்பி.யாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், ஏற்கனவே அதிரடிப்படை எஸ்பி.யாக பொறுப்பு வகித்த போது, நீலகிரி மாவட்ட பொறுப்பு எஸ்பி.யாகவும் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Pandiyarajan ,Nilgiris District ,SP ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது