×

காரமடையில் மு.க.ஸ்டாலினுக்கு 2 ஆயிரம் பெண்கள் வரவேற்பு அளிக்கின்றனர்

காரமடை, பிப். 19:   திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் விடுத்துள்ள அறிக்கை கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காரமடை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே  இன்று 19ம் தேதி மதியம் 1 மணிக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கின்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற உள்ளார். இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட கூடலூர், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த பொது மக்கள் கலந்து கலந்துகொண்டு  புகார் மனுக்களை அளிக்கலாம். மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்றவுடன் முதல் பணியாக கொண்டு இந்த மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பார். மனுக்கள் பெற வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2000 பெண்கள் முளைப்பாரி ஏந்தி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு புகார் மனுக்களை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : women ,MK Stalin ,Karamadai ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது