பொள்ளாச்சி, பிப். 19: பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கலால்துறை, சிவில்சப்ளை அலுவலகம் உள்ளிட்டவைகளில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலர்மைத்துறை அலுவலர்கக்குமேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால், தாலுகா அலுவலகம் மற்றும் சப் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவைகளில் பணியாளர்கள் மிகவும் குறைவாக இ ருந்ததுடன், வெறிச்சோடியபடி இருந்தது. வ ருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.