ஈரோடு, பிப். 19: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று உரையாற்றி வருகிறார். ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 21ம் தேதி மதியம் 1 மணிக்கு பெருந்துறை அருகே உள்ள கடப்பமடை என்ற கிராமத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் தி.மு.க. ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை வழங்கலாம். மேலும் கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.