×

குடிபோதையில் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு, பிப். 19: காஞ்சிக்கோவில் அடுத்துள்ள பள்ளபாளையம், ஸ்டார்த்தி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி(56). குடிப்பழக்கத்திற்கு அடிமையான பழனிச்சாமி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த பழனிச்சாமி ஆட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு தற்கெலைக்கு முயன்றார். உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை