×

ஈரோடு பகுதியில் நாளை மின் தடை

ஈரோடு,பிப்.19: ஈரோடு பவானி ரோடு மின்பாதையில் உயர் மின் அழுத்த கம்பிகள் மாற்றும் பணி நாளை (20ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், பி.பெ.அக்ரஹாரம், பவானி ரோடு, அன்னபூரணி தியேட்டர் பகுதி, அசோகபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, 16 அடி ரோடு, நெரிக்கல் மேடு, தாசில்தார் தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Erode ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!