×

கிணற்றில் விழுந்த முதியவர் பலி

வத்திராயிருப்பு, பிப்.19 வத்திராயிருப்பு அருகே நெடுங்குளம் ராமகிருஷ்ணாபுரம் காலயைச் சேர்ந்தவர் அய்யனார்(70). நெடுங்குளத்திற்கு வடக்கே உள்ள அபுதாஹிர் என்பவரின் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் அய்யனார் தவறி விழுந்து உயிரிழந்தார்.அவரது உடலை திருவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினர் கைப்பற்றி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அய்யனாருக்கு மாடசாமி என்ற மகனும், வள்ளிமயில் என்ற மகளும் உள்ளனர். கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...