×

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

சிவகாசி, பிப். 19:  சிவகாசி சட்டமன்ற தொகுதியில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் 13 இடங்களில் பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். சிவகாசி சட்டமன்ற  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி,  நாரணாபுரம் போஸ் காலனி, கட்டசின்னம்பட்டி  சிலோன் காலனியிலும்  தலா. ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் திட்டப்பணிகளை அவர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிகளில், சிவகாசி ஒன்றியக்  செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சுப்ரமணியன், தெய்வம், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் சுபாஷினி, பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் உசிலைசெல்வம், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன், சித்துராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதிசுப்புராஜ், தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rajendrapalaji ,constituency ,Sivakasi Assembly ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...