×

பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

விருதுநகர்,பிப்.19: விருதுநகர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாதம் தோறும் முதல் தேதியில் சம்பளம் வழங்க வேண்டும். மருத்துவப்படி ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு உடன் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள நிலுவையை வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமன தடையை உடனே நீக்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை உண்ணாவிரத்தில் வலியுறுத்தினர்.

Tags : BSNL ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு