×

விஷம் குடித்து தொழிலாளி பலி

போடி, பிப். 19: போடி அருகே உள்ள சன்னாசிபுரம் செட் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (39). இவருக்கு, நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் வீட்டில் இருந்தார். வயிற்று வலி அதிகரிக்கவே வீட்டிலிருந்த விஷ மருந்தை எடுத்து குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் இறந்தார். அவரது மனைவி பெத்தக்காள் கொடுத்த புகாரின்பேரில், போடி புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு