×

முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

காரைக்குடி, பிப்.19: காரைக்குடி ஸ்ரீராஜராஜன் கல்வியியல் கல்லூரிகளின் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா நடந்தது. முதல்வர் சிவகுமார் வரவேற்றார். முன்னாள் துணைவேந்தர், கல்விக்குழும ஆலோசகர் பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், ஆசிரியர்கள் வகுப்பறையில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ‘தேவதைகளால் தேடப்படுபவன்’ என்ற நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தியை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் பெரியநாயகி நன்றி கூறினார்.

Tags : First Year Class Opening Ceremony ,
× RELATED காவிரி நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா