×

மக்கள் நலப்பணியாளர்கள் தோப்புக்கரணம் போட்டு போராட்டம்

மதுரை, பிப்.19: மண்டியிட்டு தோப்புக்கரணம் போட்டு மக்கள் நலப்பணியாளர்கள் நேற்று 15வது நாளாக போராட்டம் தொடர்ந்தனர். மக்கள் நலப்பணியாளர்களை கடந்த 2011ல் அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு பணிக்கான ஆணை வழங்கப்பட வில்லை.  இந்நிலையில் பறிக்கப்பட்ட பணிக்கு வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தங்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் எனக் கோரி, மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 4ம் தேதி முதல் மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். போராட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். அன்று முதல் பகல் இரவு நேரத்திலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒருவிதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 15வது நாளாக அனைவரும் மண்டியிட்டு தோப்புக்கரணம் போட்டு, காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

Tags : welfare workers ,
× RELATED திண்டுக்கல்லில் மக்கள் நல...