×

திருமங்கலம் கல்லூரிக்கு விருது

திருமங்கலம், பிப்.19: கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அன்னை பாத்திமா கலைஅறிவியில் கல்லூரியின் என்எஸ்எஸ் குழுவிற்கு விருது கிடைத்துள்ளது. திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலத்திட்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் இந்த கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு பல்வேறு சமூக பணிகளை ஆற்றியது. இதனை பாராட்டி டெல்லியில் ராஷ்டிரிய சேவா ரத்னா விருது இந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து இதற்காக 42 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த விருது கிடைத்தது. அதில் திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியும் ஒன்று. விருது பெற்ற கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முனியாண்டி மற்றும் மாணவர்களை கல்லூரி தாளாளர் எம்எஸ் ஷா பாராட்டினார்.

Tags : Thirumangalam College ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...