×

சாலை விபத்தில் இறந்த இளம்பெண் கண்தானம்

சென்னை: நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜீவினி பிரகாஷ். மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (35). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஜீவினி பிரகாஷ், தனது மனைவியுடன் பெரியபாளையம்  கோயிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கன்னிகைப்பேர்  ஏரிக்கரை அருகே வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக சென்றதால், சுமதி கீழே விழுந்து தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இவர்,  ஏற்கனவே கண் தானம் செய்வதற்காக எழுதிக்கொடுத்து இருந்ததால், அதே  மருத்துவமனையில் சுமதியின்  கண் தானம் செய்யப்பட்டது.

Tags : teenager ,road accident ,
× RELATED ஐதராபாத் வாலிபர் ரஷ்யாவில் மரணம்