×

வாலிபர் அடித்து கொலை: கழிவறையில் சடலம் வீச்சு

தண்டையார்பேட்டை: பூக்கடை காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துசாமி மேம்பாலம் அருகே உள்ள பொது கழிவறையில் நேற்று முன்தினம் கடும் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுபற்றி பூக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சடலத்தின் அருகே ஒரு பை கிடந்தது. அதில், டிசர்ட், சட்ைட, பேன்ட் மற்றும் கடந்த 5ம்தேதி பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்வதற்கான ரயில் டிக்கெட்டும் இருந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், யாரேனும் அடித்து கொன்றனரா என விசாரித்து வருகின்றனர்.

Tags : Body ,death ,
× RELATED விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ....