×

பட்டா கோரி நரிக்குறவர்கள் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இனமக்கள் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. களக்காட்டூர் பஞ்சாயத்து வாகிரியார் நகரில் வசிக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் மணி உள்பட பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்கிறோம். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 10க்கும் மேற்பட்ட பசுமை வீடுகள் கட்டி சிலருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள பலர் பட்டா கேட்டு ஒரு ஆண்டுக்கு முன் விண்ணப்பம்  செய்தோம். இதுபற்றி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் .

Tags : Petitioner ,Narikkuvars ,
× RELATED வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே...