×

அதிமுகவினர் 43 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

சூலூர், ஜன. 18: சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த அதிமுகவினர் 43 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக இருப்பவர் பி.வி.மகாலிங்கம். இவர் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பச்சார்பாளையம் ஊராட்சி, தேகானி பகுதிகளில் இருந்து பிரகாஷ்,ராஜேஷ்,ஆனந்தகுமார் ரங்கன்,செந்தில்குமார், பாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோரும் ரவிக்குமார்,தங்கவேல் வெள்ளிங்கிரி உட்பட 43 பேர் அதிமுகவில் இருந்து விலகி தங்களை சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மகாலிங்கம் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். தி.மு.க.வில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் வாரப்பட்டி தர்மராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ,சார்பு அணியை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.

Tags : AIADMK ,DMK ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...