×

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து டிரைவர் தற்கொலை

அவிநாசி, ஜன. 18: அவிநாசி முத்துச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்  அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் தனபால் (55). ஆட்டோ டிரைவரான இவர், தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இந்த நிலையில் நீச்சல் தெரியாத தனபால் நேற்று காலை, அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

கோயிலுக்கு வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார் தனபாலின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை