×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – இருவரிடம் 17 மணி நேரமாக விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் தனிப்படை 17 மணி நேரமாக விசாரணை நடத்துகின்றனர். 2வது நாளாக இன்று இரண்டு பேரிடமும் 7 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தில் நேற்று இருவரிடமும் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. கோடநாடு வழக்கில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் முறையே 8 மற்றும் 9வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி.க்கள் சந்திரசேகர், சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 5வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சதீசன், 6வதாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டியிடமும் தனிப்படை விசாரணை நடத்துகின்றனர். கொள்ளையடிக்க தூண்டியது யார், கொள்ளையடித்த ஆவணங்கள், பொருட்கள் குறித்தும் போலீஸ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளனர்….

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – இருவரிடம் 17 மணி நேரமாக விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Nilgiri ,Santhoshsami ,Manojsami ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...