×

பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு முத்துப்பேட்டை அருகே பைக் கவிழ்ந்து வாலிபர் படுகாயம்

முத்துப்பேட்டை, பிப்.18: முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பகுதியில் திருவண்ணாமலையை சேர்ந்த சகாதேவன் மகன் கர்ணன்(30) என்பவர் கதிர் அடிக்கும் மிஷின் வைத்து வாடகைக்கு கதிர் அடிக்கும் பணிகள் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கர்ணன் நேற்று காலை கதிர் அடிக்கும் மிஷினுக்கு டீசல் வாங்குவதற்கு பாண்டி பெட்ரோல் பங்கிற்கு சென்றபோது பின்னத்தூர் வளைவில் நாய் ஒன்று குறுக்கே சென்றது. இதில் கர்ணன் சென்ற பைக் மோதி குறுக்கே சென்ற நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதில் பைக் கீழே விழுந்து கர்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Parents ,protest ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்