திருத்துறைப்பூண்டி, பிப்.18: திருத்துறைப்பூண்டி ஒன்றியம், நகர இந்திய கம்யூ. கட்சி சார்பில் தேர்தல் நிதி, கட்சி வளர்ச்சி நிதியளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பாலு தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமியிடம் நகரம் சார்பில் ரூ.3 லட்சமும், ஒன்றியம் சார்பில் ரூ.7 லட்சமும் நிதி வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், நகர செயலாளர் முருகேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.