×

சீரமைக்க ேகாரிக்கை ஒரத்தநாட்டில் 125 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்

ஒரத்தநாடு, பிப்.18: ஒரத்தநாட்டில் 125 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். எம்பி வைத்திலிங்கம், 125 பயனாளிகளுக்கான வீட்டு மனைபட்டாவை வழங்கினார். முன்னதாக ஆர்டிஓ வேலுமணி வரவேற்றார். டிஆர்ஓ அரவிந்தன் முன்னிலை வகித்தார். ஒரத்தநாடு சுற்று வட்டார பகுதிகளில், சொந்த இடம் இல்லாமல் அரசு புறம்போக்கு நிலத்தில் 125 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்தனர். அவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒரத்தநாட்டில் ரூ.56.92 லட்சம் மதிப்பில், 125 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. முடிவில் தாசில்தார் அருணகிரி நன்றி கூறினார்.

Tags : country ,
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...