×

கபிஸ்தலம் பாலக்கரையில் மக்களை அச்சுறுத்தும் சாய்ந்த மின்கம்பம்

பாபநாசம், பிப்.18: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பாலக்கரை அகமது நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஒரு மின்கம்பம் நாளுக்கு நாள் சாய்ந்துக் கொண்டே வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் பட்சத்தில் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சரி செய்ய அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை மக்கள் கூறுகையில், இது, குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : bridge ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...