×

பைக் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

அறந்தாங்கி, பிப்.18: அறந்தாங்கியை அடுத்த மன்னகுடியைச் சேர்ந்தவர் நாகு.( 62). இவர் கீற்று கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 10ம் தேதி மன்னார்குடியில் இருந்து அறந்தாங்கிக்கு மொபட்டில் வந்துவிட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். அவர் வடுகாடு அருகே சென்ற போது அவரது மொபட்மீது அடையாளம் தெரியாதவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நாகு நேற்று காலை இறந்தார். அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு