அறந்தாங்கி, பிப்.18: நாகுடி அருகே மணல் கடத்திய மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகுடி காவல்நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் பட்டமுடையான் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வௌ்ளாற்றில் இருந்து அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த அய்யப்பன் என்பவருக்கு சொந்தமான மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.